விஷ ஊசி போட்டு 300 பேர் கொலை?! அச்சத்தில் பொதுமக்கள் !

 
நாமக்கல்

இன்றைய அவசர யுகத்தில் யாரும் பெற்றவர்களை உடன் வைத்து பராமரிக்க தயாராக இல்லை. ஏதாவது உதவி மையங்கள், முதியோர் இல்லங்களில் சேர்த்து விட்டுவிடலாம் என நினைக்கின்றனர். ஆனால் அதுவும் ஓரளவு வசதியுள்ள குடும்பங்கள். நடுத்தர குடும்பங்களில் பெற்றோர் நடமாடும் வரை சின்ன சின்ன வேலைகள் செய்வதற்கும், ஒத்தாசைக்கும், குழந்தைகளுக்கு ஆயா வேலை பார்ப்பதற்கும் வைத்துக் கொள்கின்றனர்.பிள்ளைகள் வளர்ந்த பிறகு, தங்கள் தேவைகள் பூர்த்தியடைந்த பிறகு பெற்றோரை சேர்த்து வைத்துக் கொள்ள யாரும் விரும்புவதில்லை. 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ரூ.5000 கொடுத்தால் வயது முதிர்ந்து, படுத்த படுக்கையாய் இருக்கும் முதியவர்களுக்கு விஷஊசி செலுத்தி கருணை கொலை செய்யும்போக்கு அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது. இதுவரை 300 பேர் வரை கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒருவர் கேள்வி கேட்க, இன்னொருவர் பதில் சொல்லும் விதமாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவை பார்த்த அதிகாரிகள் தீவிர விசாரணயில் இறங்கி உள்ளனர். அந்த வீடியோவில் என்ன இருக்கிறது? சம்பந்தப்பட்ட வீடியோவில் பேசும் நபர், பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்து சென்றுள்ளதும், அவர் தனியார் ஆம்புலன்சில் கிளீனராக வேலைப் பார்த்து வருவதும் தெரிகிறது.

நாமக்கல்

பள்ளிபாளையத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் ( 33), எந்த வேலைக்கும் செல்லாமல், பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையிலேயே எந்த நேரமும் சுற்றித்திரிவதை வழக்கமாக கொண்டு இருந்தார். மேலும், பிணவறையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருடன் சேர்ந்து, அவர் சொல்லும் வேலைகளை செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி மோகன்ராஜ் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அதில் அவர் பேசியிருந்ததாவது, பள்ளிபாளையம் பகுதியில் வயது முதிர்ந்த, உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருப்பவர்களை, அவர்களின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் படி, விஷ ஊசி போட்டு கொன்றுள்ளேன். இதற்காக, 5,000 ரூபாய் கட்டணம் வசூலிப்பேன். இதுவரை  300க்கும் மேற்பட்டோரை, விஷ ஊசி போட்டு கொன்றுள்ளேன். 10 ஆண்டாக இந்த வேலையை செய்து வருகிறேன் என பேசியுள்ளார். 

நாமக்கல்

இதையறிந்த பள்ளிபாளையம் போலீசார், மோகன்ராஜை ஸ்டேஷனுக்கு அழைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த நபர் மாடுகளில் ஒட்டுண்ணியை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ஆபத்தான ஒரு பொருளை வைத்திருந்ததும், அதனை தனியார் மருந்து கடையில் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.  அவர், 'போதையில் உளறி விட்டதாக, தெரிவித்தார்.

எனினும் தொடர்ந்து விசாரணை நடைபெறுவதாகவும், 300 பேரை கொலை செய்தது உறுதியாகி ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில், அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.இதுதொடர்பாக புகார்கள் இதுவரை பதிவாகவில்லை. இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், விசாரணை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web