கோடிகளில் வருவாய் இழப்பு... 3,000 மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்!

 
படகு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் ஜூலை 8ம் தேதி சனிக்கிழமை 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில்  மீன்பிடிப்பதற்காக அனுமதி சீட்டு பெற்று  கடலுக்குள் சென்றனர். இவர்களில் 15 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி  நெடுந்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு விசை படகுகளையும்,   மீனவர்களையும் கைது செய்தனர்.  அவர்களை விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். ஜூலை 24ம் தேதி வரை  சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

படகு சேதம் மீனவர்கள்

 இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 15 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என  வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் சுமார் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  இந்த திடீர் வேலை நிறுத்த போராட்டத்தினால்  சுமார் 3000 மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களால் இன்று ஒரு நாளில் ஒரு கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை அவ்வப்போது மீனவர்களை கைது செய்வது வாடிக்கையாகி வருகிறது.   இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறலுக்கு  தமிழக அரசும், அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க எடுக்கவேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.  

மீனவர்கள்

ஆனாலும் இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு இதுவரை நிரந்தர முடிவு எடுக்கப்படவில்லை என ஆதங்கப்படுகின்றனர் மீனவர்கள்.   நடுக்கடலில்  தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடிப்பதும், மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதும், இதனால்  குண்டு பாய்ந்து மீனவர்கள் பலியாகும் சம்பவமும் தொடர்ந்து வருகிறது.   அத்துடன் மீனவர்களின் படகுகளை சிறை பிடித்து வைத்துக்கொள்கிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web