32 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.. வியாபாரி கைது!

தூத்துக்குடியில் பெட்டிக்கடையில் விற்பனைக்காக 32 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில், நகர உதவி காவல் கண்காணிப்பாளர் மதன் தலைமையிலான தனிப்படை போலீசார் மாநகர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் நடமாட்டத்தைத் தடுக்க ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பூபாலராயர்புரம் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்து இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் கடையில் இருந்த 32 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலையை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக கடை உரிமையாளர் விஜயகுமார் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!