34,087 சிறப்புப் பேருந்துகள்... ஆனாலும் விடிய விடிய கிளம்பாக்கத்தில் தவித்த பயணிகள்!

 
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள்

பொங்கல் தொடர் விடுமுறைக் கொண்டாட்டம் துவங்கிய நிலையில், சொந்த ஊர் நோக்கி செல்லும் பொதுமக்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் 34,087 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், கடந்த இரு தினங்களாகவே பொங்கல் கொண்டாட அரசு பேருந்தில் சொந்த ஊர்களுக்கு சென்னையில் இருந்து புறப்பட்டவர்கள் கடும் சிரமத்திற்குள்ளானார்கள். கிளம்பாக்கத்தில் போதிய பேருந்துகள் இல்லை என்று புலம்பினார்கள். 

1. கிளாம்பாக்கம் பேருந்து முனையம் (KCBT):

தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்குச் செல்வோர் இங்குச் செல்ல வேண்டும்.

ஊர்கள்: திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, கன்னியாகுமரி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், தஞ்சாவூர், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம்.

பேருந்து யுபிஐ

2. கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையம் (கிளாம்பாக்கம் முனையத்திற்கு அருகிலேயே):
ஊர்கள்: வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் இங்கிருந்து புறப்படும்.

3. கோயம்பேடு பேருந்து நிலையம் (CMBT):
கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாகச் செல்லும் பேருந்துகள், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள்.

பேருந்து

4. மாதவரம் புதிய பேருந்து நிலையம்:
ஊர்கள்: பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் செல்வோருக்கான பேருந்துகள். மேலும், இங்கிருந்து வழக்கமான சில திருச்சி, சேலம், கும்பகோணம் பேருந்துகளும் இயக்கப்படும்.

கடந்த ஜனவரி 10ம் தேதி முதல் நேற்று ஜனவரி 14ம் தேதி வரை 34,087 பேருந்துகள் இயக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் புகார்கள்: 94450 14436 (24 மணி நேரம்), ஆம்னி பேருந்து அதிக கட்டணப் புகார்: 1800 425 6151 (கட்டணமில்லா எண்). எனினும், நேற்று இரவும் விடிய விடிய பேருந்துகளுக்காக பயணிகள் கிளாம்பாக்கத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!