இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்க தேச மீனவர்கள் 35 பேர் கைது!
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்ததாக 35 மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யப்பட்டுள்ளனர். வங்காள விரிகுடாவில் புதன்கிழமை காலை சந்தேகத்திற்கிடமான இரண்டு இழுவை படகுகளை காவல்படை கண்டறிந்தது. உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த படகுகளுடன் மீனவர்களை சிறைப்பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களும், அவர்களது இரண்டு மீன்பிடிப் படகுகளும் ஃப்ரேசர்கஞ்ச் மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடர்கிறது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் வியாழக்கிழமை பிற்பகல் காக்ட்விப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் இந்திய கடல் எல்லையில் அத்துமீறிய பல வங்கதேச மீன்பிடிப் படகுகள் பிடிபட்டுள்ளன. கடல் எல்லை பாதுகாப்பில் கடலோர காவல்படை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
