35 மாவட்டங்களில் மே மாதம் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடத்த திட்டம்!

தமிழகத்தில் 35 மாவட்டங்களில் உள்ளாட்சிகளில் 133 காலி பதவிகள் உள்ளன. இந்த பதவிகளுக்கு வரும் மே மாதம் இடைத்தேர்தல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம், 2027 வரை இருக்கிறது. அதனால், நகர்ப்புற உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தி, நிரப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 315 இடங்களுக்கு மே மாதம் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
ஊரக,நகர்ப்புற உள்ளாட்சி இடைத்தேர்தல் ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. சென்னை மாநகராட்சியில் 4 வார்டு கவுன்சிலர் உள்பட 35 மாவட்டங்களில் 133 காலி பதவிகள் உள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!