பேரதிர்ச்சி!! 3 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை.. !!

 
சிறுமி

வீட்டின் அருகே இருந்து மூன்று வயது பெண் குழந்தையை கடத்தி இளைஞர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நடந்துள்ளது.

தெற்கு டெல்லியில் உள்ள பத்தேபூர் பேரி என்ற பகுதியில் ராணி என்பவர் கணவர் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று வயது பெண் குழந்தை உள்ளது. ராணியின் வீட்டருகே மத்தியபிரதேசத்தை சேர்ந்த ராம்நிவாஸ் பனிகா(27), சக்திமான் சிங் (22) என்ற இரண்டு இளைஞர்கள் தங்கியிருந்து பணி செய்து வந்தனர்.

childabuse

இந்நிலையில் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த ராணியின் மூன்று வயது பெண் குழந்தையை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ராணி மற்றும் உறவினர்கள், குழந்தையை அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். அப்போது, குழந்தையை இரு இளைஞர்கள் காட்டுப் பகுதி அருகே அழைத்து சென்றதை பார்த்ததாக கூறியுள்ளனர்.

இதைகேட்ட தாயார் ராணி சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த நிலையில், அங்கே குழந்தை அழுது கொண்டிருந்தது. மேலும், குழந்தையின் உறுப்பில் ரத்த காயம் இருந்துள்ளது. இதை பார்த்து பதறிப்போன தாயார் ராணி குழந்தையை வீட்டு தூக்கிச் சென்று சம்பவத்தை கணவரிடம் கூறியுள்ளார். உடனடியாக பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அத்துடன் இருவர் மீது காவல்துறையில் புகார் அளித்தனர்.

childabuse

அதன்பேரில், விசாரணை நடத்திய போலீசார் இளைஞர்கள் ராம்நிவாஸ் மற்றும் சக்திமான் சிங் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்கள் இருவரும்தான் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் உறுதியானது. அப்போது மதுபோதையில் இருந்துள்ளனர். பின்னர் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web