4 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி!! குளிக்க சென்ற போது சோகம்!!
சேலம் மாவட்டத்தில் எடப்பாடி காவிரி ஆற்றில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் சிலர் குளிக்க சென்றனர். அவர்களில் 4 பேர் ஆற்றில் மூழ்கிவிட்டனர். குளிக்கச் சென்றவர்களில் பாண்டியராஜன், மணிகண்டன், மற்றொரு மணிகண்டன், முத்துச்சாமி 4 பேரும் நீச்சல் தெரியாத நிலையில் அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆற்றில் மூழ்கிய நான்கு மாணவர்களின் உடல்களை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கல்லூரி மாணவர்கள் 10 பேர் கல்வடங்கம் காவிரி ஆற்றில் கும்பலாக குளிக்க சென்ற நிலையில் அதில் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 4 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் அந்த பகுதியில் ஆற்றில் குளிக்க தடை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!