பயங்கர வேகம்... கட்டுப்பாட்டை இழந்த கார்... சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியான சோகம்!
திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 4 பேர் கொண்ட கும்பல் வாடகை காரில் மதுரை வழியாக திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். கார் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை லஞ்சமேடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு ஆட்டோவின் பின்புறம் மோதி பேருந்து நிறுத்தத்தின் மீதும் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில், காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அனுமதிக்கப்பட்டவருக்கு சுயநினைவு இல்லாததால் மேலும் பலியானவர்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை இல்லை.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேருந்து நிறுத்தத்தின் மீது கார் மோதி 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!