மின்சாரம் தாக்கி 4 பேர் பலி!! வேருடன் சாய்ந்த 400 மரங்கள்!! மாண்டஸ் கோர தாண்டவம்!!
மாண்டஸ் புயல் நேற்று இரவு கரையைக் கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த புயல்காற்று வீசியது. இந்தப்புயலால் சென்னையில் கோரதாண்டவம் நிகழ்ந்துள்ளது. தமிழக அரசு ஏற்கனவே எடுத்திருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரும் உயிர் சேதம், பொருள் சேதம் தடுக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “சென்னையில் 16 சுரங்கப்பாதைகளில் நீர் தேங்கவில்லை. போக்குவரத்திற்கும் தடையில்லை. ஒவ்வொரு மண்டலத்திலும் 20 முதல் 30 மரங்கள் விழுந்துள்ளன. இதனால் சென்னை முழுவதும் 300 முதல் 400 மரங்கள் விழுந்துள்ளன. இதனால் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. இந்த மரங்களை அகற்றும் பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் இரவு முதலே செய்து வருகின்றனர். இன்று மாலைக்குள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு விடும் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்துள்ளார்.
சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் 7 மெயின் ரோட்டில் வசித்து வருபவர் லட்சுமி. இவர் குடிசை வீட்டில் வசித்து வருவதால் நேற்று புயல் எச்சரிக்கை காரணமாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லலாம் என முடிவெடுத்தனர். இதனால் அருகில் அமைந்திருக்கும் வாகனம் நிறுத்தும் இடத்தில் இரவுப் பொழுதை கழிக்கலாம் என முடிவு செய்தனர்.
அதன்படி லட்சுமியும் அவரது அண்ணன் மகன் ராஜேந்திரன் இருவரும் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு சென்றனர். அங்கு அறுந்து விழுந்திருந்த மின்கம்பி மீது தெரியாமல் கால் வைத்ததால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். தூங்குவதற்கு பாய் எடுத்து வரும்போது அறுந்து கிடந்த மின் கம்பியின் மீது இரண்டு பேரும் கால் வைத்ததால் இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் பகுதியில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை முடித்துவிட்டு வடமாநில இளைஞர்கள் திரும்பிக் கொண்டிருந்தபோது 2 பேர் விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!