பயணிகள் மகிழ்ச்சி... இன்று முதல் 4 புதிய புறநகர் ரயில்கள்!

தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று முதல் ஆவடி, கும்மிடிப்பூண்டிக்கு புதிதாக இரு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதனால், புறநகர் ரயில் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பில், சென்னை சென்ட்ரல், கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு, ஆவடி, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை சென்ட்ரலிலிருந்து ஆவடி மற்றும் கும்மிடிப்பூண்டிக்கு புதிதாக இரு மின்சார ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவடியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 5.25-க்கும், மறுமாா்க்கமாக சென்ட்ரலிலிருந்து முற்பகல் 11.15க்கும் புதிய ரயில் (எண் 43006, 43013) இயக்கப்படும். அதே போல், கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 9.10-க்கும், மறுமாா்க்கமாக சென்ட்ரலிலிருந்து இரவு 10.35-க்கும் புதிய ரயில் (எண் 42014, 42035) இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் இன்று முதல் 4 புதிய ரயில்கள் இயக்கப்படுவதால் சென்னை புறநகர் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கூடுதல் ரயில் சேவை மூலம் காலை மற்றும் இரவில் வேலைக்குச் செல்பவர்களும் வேலையிலிருந்து வீடு திரும்புபவர்களும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!