தொடர் கனமழை... வீடு இடிந்து விழுந்து 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி!

 
மழை

 
தலைநகர் தில்லியில் இன்று மே 2ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. துவாரகா, கான்பூர் உட்பட  பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.


இந்நிலையில், மழை காரணமாக நஜாப்கரில் வீடு இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட 4 பேர் பலியாகி இருப்பதாக   தகவல்கள் வெளியாகியுள்ளது.இது குறித்து  அதிகாரி ஒருவர்  தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இதனிடையே கனமழையைத் தொடர்ந்து நஜாப்கரில் உள்ள கர்காரி நஹார் கிராமத்தில் காலை 5 மணிக்கு வீடு இடிந்து விழுந்ததாக தகவல் கிடைத்தது.இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் இடிபாடுகளில் சிக்கிய நான்கு பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web