பச்சிளங் குழந்தையின் மூக்கை கடித்த எலி.. பரிதாபமாக பலியான சோகம்..!!

 
குழந்தை மூக்கை கடித்த எலி

பச்சிளங் குழந்தையின் மூக்கை எலி கடித்ததால் குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள நாகனூல் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிவா மற்றும் லட்சுமி கலா தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் 40 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், குழந்தையுடன் லட்சுமி கலா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். மூன்று நாட்களுக்கு முன், வீட்டில் இருந்த குழந்தையின் மூக்கை எலி கடித்துள்ளது. அதன்பிறகு, லட்சுமி கலாவுக்கு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, தாய் வீட்டிலேயே தங்கியிருந்தார்.

இந்நிலையில், மீண்டும் குழந்தையின் மூக்கை எலி கடித்ததாக கூறப்படுகிறது. இதன் விளைவாக, குழந்தையின் மூக்கில் தொடர்ந்து இரத்தப்போக்கு உள்ளது. இதையடுத்து, குழந்தையை சிகிச்சைக்காக நாகர் கர்னூல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், தீவிர சிகிச்சைக்காக ஐதராபாத் கொண்டு செல்ல அறிவுறுத்தினர்.

ஹைதராபாத்தில் உள்ள நிலோபர் மருத்துவமனைக்கு குழந்தையை பெற்றோர் அழைத்துச் சென்றனர், அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. பிறந்து 40 நாட்களே ஆன குழந்தை எலி கடித்து உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web