நீடிக்கும் பதற்றம்... காஷ்மீர் பகுதியில் 42 தீவிரவாத முகாம்கள் ... இந்திய ராணுவம் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 22 ம் தேதி ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் திடீரென நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமை முதன்மையாக நடத்தி வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 42 தீவிரவாத முகாம்கள் செயல்பட்டு வருவதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இதனை தற்போது அடையாளம் கண்டுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து எல்லை கட்டுப்பாடு கோடு அருகே தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 130 தீவிரவாதிகள் வரை உள்ளே இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!