4,500 கிலோ நெய்... 2,668 அடி மலை உச்சியில் மகாதீபம்... வீட்டில் தீபமேற்ற நல்ல நேரம் எது?

 
திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம்

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபப் பெருவிழா நாளை (டிசம்பர் 3, புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதற்காகக் கோயில் வளாகம் வண்ண விளக்குகள் மற்றும் மலர் அலங்காரங்களால் கயிலாயம் போல காட்சியளிக்கிறது. மகாதீபத்தை தரிசிக்க நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.

பரணி தீபம்:

நாளை அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்படும். மகாதீபம் நேரம்: மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். நெய்: மகாதீபத்திற்காக 4,500 கிலோ முதல் தர தூய நெய் 'ஆவின்' மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா தீபம்

தீபக் கொப்பரை:

ஐந்தரை அடி உயரம் கொண்ட செப்பினால் உருவான மகாதீப கொப்பரைக்கு வண்ணம் தீட்டப்பட்டு, அர்த்தநாரீஸ்வரர் உருவத்துடன் தயார் நிலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரி: மகா தீபம் ஏற்றுவதற்காக, 1,500 மீட்டர் நீளத் துணித் திரி, உபயதாரர்கள் மூலம் கோயில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டுள்ளது.

மலை உச்சிக்குச் செல்லும் கொப்பரை:

சுமார் 200 கிலோ எடையுள்ள மகா தீப கொப்பரைக்கு இன்று (டிசம்பர் 2) அதிகாலை 5 மணிக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, திருப்பணியாளர்கள் தோளில் சுமந்தபடி மலை உச்சிக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வழிபாடு:

மலை உச்சியில் நிலை நிறுத்தப்படும் கொப்பரைக்குத் பாரம்பரிய வழக்கப்படிச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். நெய் மற்றும் திரி ஆகியவை நாளை மலைக்குக் கொண்டு செல்லப்படும். இந்த ஆண்டு சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருவண்ணாமலை மகாதீபம் கார்த்திகை

மலையேறத் தடை:

மண் சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக வல்லுநர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், தீபத் திருவிழாவின்போது பக்தர்கள் மலையேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்:

வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் தலைமையில், 5 டிஐஜிக்கள், 32 எஸ்பிக்கள் உட்பட 15,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். பக்தர்களுக்காக 24 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை இன்று முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை செயல்படும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!