அதிர்ச்சி!! டைட்டான் நீர் மூழ்கிக் கப்பலில் பயணித்த 5 பேர் மரணம்!!

 
டைட்டானிக்

110 வருடங்களுக்கு முன்பு உலகின் மிகப்பெரிய கப்பலான டைட்டானிக் பனிப்பாறையில் மோதி 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனுடைய சிதிலமடைந்த படிவுகள் ஆழ்கடலில் உள்ளதாக சமீபத்தில் கண்டறியப்பட்டு அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.  இந்த டைட்டானிக் கப்பலை சுற்றிப்பார்க்க, அமெரிக்காவின் ஓசன்கேட் நிறுவனம் பயணம் ஒன்றை  ஏற்பாடு செய்தது. இதில் பயணிக்க 2.5லட்சம் டாலர்கள்.  டைட்டன் என்ற நீர்மூழ்கிக்கப்பலில் பிரிட்டிஷ் நாட்டவரான ஹமிஷ் ஹார்டிங், பாகிஸ்தானை சேர்ந்த ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான், ஓசன்கேட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான பைலட் ஸ்டாக்டன் ரஷ் மற்றும் பிரெஞ்சு ஆய்வாளர் மற்றும் நிபுணரான பால்-ஹென்றி நர்கோலெட்   5 பேரும் ஜூன் 18ல் இந்த கப்பலில் பயணத்தை தொடங்கினர்.

டைட்டானிக்
பயணத்தை தொடங்கிய 1 மணிநேரம் 45 நிமிடங்களில், அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.   இதனையடுத்து அவர்கள் 5 பேரையும் தேடும் பணியில் அமெரிக்க கடலோரக்காவல்படை தீவிரமாக ஈடுபட்டது. குறிப்பாக டைட்டனில் இருந்து வரும் எந்த ஒலியையும் கேட்கும் சோனார் மிதவைகளும் தேடுதலுக்கு பயன்படுத்தப்பட்டன.

டைட்டானிக்

ஆனால் தற்போது கடலுக்கடியில் நீர்மூழ்கிக்கப்பலின் சில நொறுங்கிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, டைட்டனில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  டைட்டன் நீர்மூழ்கிக்கப்பல் ஒரு பெரிய வெடிப்புக்கு ஆளாகியிருக்கலாம் என பாதுகாப்பு அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு கொண்டு வரப்படும் எனவும் அமெரிக்க கடலோரக்காவல்படை அதிகாரிகள்  தெரிவித்துள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web