5 ரூபாய் டாக்டர் மரணம்.. கடைசி நொடி வரை சேவை.. திரண்டு வந்து மக்கள் கண்ணீர் அஞ்சலி !!

 
தாத்தாச்சாரியார்

ஏழை எளிய மக்களுக்காக 5 ரூபாய் முதல் 20 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த தாத்தாச்சாரியார் என்ற மருத்துவர் உயிரிழந்தார். 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்தவர் தாத்தாச்சாரியார். 1932ஆம் ஆண்டு பிறந்த இவர், 1990ஆம் ஆண்டு வரை ஸ்ரீமுஷ்ணம் அரசு மருத்துவமனை மருத்துவராக 24 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். எனினும் ஏழை எளிய மக்களுக்காக மருத்துவ சேவையாற்ற முன்வந்தார் தாத்தாச்சாரியார்.

தாத்தாச்சாரியார்

தனது வீட்டிலேயே மருத்துவமனை அமைத்து அங்கு ஏழை, எளிய மக்களுக்காக மருத்துவம் பார்த்தார். அதுவும் அந்த மக்களிடம் வெறும் 5 ரூபாய் மட்டுமே பெற்றுக்கொண்டு மருத்துவம் பார்த்து வந்தார். இதனால் அப்பகுதி மக்களிடம் மிகவும் பிரபலமானார். மேலும் 5 ரூபாய் டாக்டர் எனவும் பெயர் பெற்றார்.

தாத்தாச்சாரியார்

வயது ஆனாலும் மக்களுக்கான மருத்துவசேவையை அவர் விடவில்லை. தொடர்ச்சியாக தனது 91 வயது வரை இவர் மருத்துவ சேவையாற்றி இருக்கிறார். இவருக்கு 3 முறை இருதய அறுவை சிகிச்சை செய்த நிலையில், வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும

From around the web