ஜாக்கெட்டிலிருந்து கீழே விழுந்த வழுக்கிய ரூ.50000 பணக்கட்டு... கண் முன் பைக் ஆசாமி பறித்து சென்ற கொடூரம்!
திரைப்படக் காட்சியை நினைவூட்டும் பரபரப்பான சம்பவம் ஜெய்ப்பூர் பஜாஜ் நகர் பகுதியில் பகல்நேரத்தில் நடந்துள்ளது. பர்கத் நகர் சாலையோர கடை வீதியில் நடந்த இந்த சம்பவம், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் முழுவதுமாக பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
जयपुर के बरकत नगर में दिनदहाड़े चोरी की वारदात।शॉपिंग करने आई महिला के जैकेट से 50 हजार सड़क पर गिरे।दो बाइक सवार युवकों ने नोटों की गड्डी पर डाली नजर।
— Roshan sharma (@roshansharma_j) December 5, 2025
एक युवक बाइक से कूदकर गड्डी उठाकर भागा।महिला ने दौड़कर पकड़ने की कोशिश की, लेकिन आरोपी फरार।वारदात कल शाम 4:45 बजे हुई। पूरी… pic.twitter.com/FssUpyYYoY
சிசிடிவி காட்சிகளில், கைப்பையுடன் சாலையை கடக்கும் பெண் ஒருவர், கையில் மடித்திருந்த ஜாக்கெட்டை அணிய முயன்ற போது கவனக்குறைவாக ரூ.50 ஆயிரம் இருந்த பணக்கட்டு கீழே விழுகிறது. இதை கவனிக்காத அவர் தொடர்ந்து நடந்து செல்கிறார். அச்சமயம், மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் பணக்கட்டைக் கண்டு, சிறிது தூரம் சென்று திரும்பி வந்து அதை எடுத்துக்கொண்டு அந்தப் பெண்ணின் கண் முன்னே அதிவேகமாக தப்பிச் செல்கின்றனர்.
பணத்தை இழந்ததை உணர்ந்த உடன் அந்தப் பெண் அவர்களைத் துரத்தினார். ஆனால் சாலையின் நெரிசல் காரணமாக பிடிக்க முடியவில்லை. திருமண ஏற்பாடுகளுக்காக ஜெய்ப்பூருக்கு வந்திருந்த அந்தப் பெண் மற்றும் அவரது மகள் கடைகளில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பஜாஜ் நகர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
