சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கிய 5செமீ ஆணி... அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை!

மருத்துவர் பாலசுப்பிரமணியன் கண்காணிப்பில் காது மூக்கு தொண்டை பிரிவு துறைத் தலைவர் ரவிக்குமார் தலைமையில் மருத்துவக் குழுவினர் நவீன சிகிச்சை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து சுமார் 30 நிமிடத்தில் சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த ஆணியை அகற்றி சிறுவனின் உயிரைக் காப்பாற்றி சாதனை படைத்தனர்.இதுகுறித்து மருத்துவக்கல்லூரி டீன் ரேவதி பாலன் ”சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கிய ஆணியை நமது மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றி சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக தென் தமிழகத்தில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது; சிறப்பான சிகிச்சை அளித்து நமது மருத்துவக் குழுவினர் சாதித்துள்ளனர் என தெரிவித்தார். ”நெல்லை அரசு மருத்துவ மனையில் மருத்துவக் குழுவினர் துரிதமாக செயல்பட்டு எனது மகனின் மூச்சு குழாயில் சிக்கியிருந்த ஆணியை அகற்றி உயிரைக் காப்பாற்றி உள்ளனர். மருத்துவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என தாய் தாகாபீவி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!