பெரும் சோகம்... கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி

 
கோவா

கோவா மாநிலம் ஷிர்காவ் கிராமத்தில் லைராய் தேவி கோயிலில் புகழ்பெற்ற 'ஜாத்ரா'   திருவிழா  நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள்  கலந்துகொண்டுள்ளனர். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த டிரோன்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
எனினும் நேற்று நள்ளிரவு பக்தர்கள் ஒரு சரிவான பாதையில் வந்துகொண்டிருந்தபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் கோவா மாவட்ட மருத்துவமனை மற்றும் கோவா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


 கோவா முதல்வர் கோவா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை  நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.  


பிரதமர் மோடி இதுதொடர்பாக தன்னுடன் தொலைபேசியில்  பேசியதாகவும் மத்திய அரசு தேவையான உதவிகளைச் செய்யும் எனக் கூறியதாகவும் முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.  இச்சம்பவம் குறித்து பிரதமர் மோடி  தனது எக்ஸ் பக்கத்தில், ஷிர்காவ் கோயில் கூட்ட நெரிசலில் பக்தர்கள் உயிரிழந்தது கவலை அளிக்கிறது.  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்,  காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web