தறிகெட்டு ஓடிய லாரி.. கடைகளுக்குள் புகுந்தததில் 6 பேர் காயம்!

 
லாரி விபத்து

தஞ்சாவூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய மணல் லாரி சாலையோர கடைகளுக்குள்ளே திடீரென புகுந்ததில், கடைகளில் இருந்தவர்கள் தெறிந்து ஓடினார்கள். இந்த விபத்தில் பெண் உட்பட 6 பேர் பலத்த காயமடைந்தனர்.

accident

திருவையாறு அருகே உள்ள ஆசனூர் மணல் குவாரியில் இருந்து லாரி ஒன்று மணல் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. நடுக்கடை பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென லாரியின் ஸ்டியரிங் உடைந்ததில், ஓட்டுநர் வீரமணியின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டில் தறிகெட்டு அலைபாய்ந்த படி ஓடத் துவங்கியது. பின் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது மோதி விட்டு, அருகில் இருந்த ஜெராக்ஸ் மற்றும் நகைக் கடைகளுக்குள் புகுந்தது. திடீரென லாரி ஒன்று தறிகெட்டு, கடைகளுக்குள் புகுவதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அலறியடித்தப்படி ஓடினார்கள். இந்த விபத்தில் 6 பேர் பலத்த காயமடைந்தனர். 

தஞ்சாவூர் தஞ்சை

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக தஞ்சை - அரியலுர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web