பெரும் சோகம்... லாரி மீது டெம்போ மோதி 7 பேர் பலி!

பீகார் மாநிலத்தில் பாட்னா மாவட்டத்தில் லாரி - டெம்போ நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் பலியானார்கள். இந்த விபத்து நேற்று பிப்ரவரி 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு மசௌரி பகுதியில் உள்ள நூரா பாலம் அருகே நிகழ்ந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மசௌரி காவல் நிலைய அதிகாரி விஜய்குமார் ” நூரா பாலம் அருகே லாரியும் டெம்போவும் மோதி விபத்துக்குள்ளான தகவல் கிடைத்ததும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டது. ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பலியானவர்களின் அடையாளம் கண்டறியப்பட்டு வருகிறது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும் விசாரணை நடந்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!