70 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்க வாய்ப்பு... தமிழகத்தில் நாளையுடன் எஸ்.ஐ.ஆர். பணி நிறைவு!

 
எஸ்ஐஆர்

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். (SIR) எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் கீழ் வாக்காளர் கணக்கெடுப்புப் பணிகள் நாளையுடன் (டிசம்பர் 11) நிறைவடைகிறது. இந்தச் சிறப்புப் பணிகளின் அடிப்படையில், வரும் 16-ஆம் தேதி வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 70 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நீக்கமானது, வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்வதற்காக மேற்கொள்ளப்படுகிறது. சுமார் 70 லட்சம் பேர் வரை நீக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தேர்தல் ஆணையம் அளித்த தகவல்கள்: இறந்தவர்கள் சுமார் 25 லட்சம், நிரந்தரமாக இடம் மாறியவர்கள் சுமார் 40 லட்சம், இரட்டைப் பதிவுகள்: சுமார் 5 லட்சம் என்று தெரிய வந்துள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியல்

கடந்த நவம்பர் 4-ஆம் தேதி முதல் நடந்த எஸ்.ஐ.ஆர். பணியின்படி, தமிழகத்தில் உள்ள 6 கோடியே 41 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களில், 99.95% வாக்காளர்களுக்குப் படிவங்கள் வழங்கப்பட்டுவிட்டன. இதுவரை 99.55% படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 16-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் அல்லது திருத்தம் செய்ய விரும்புபவர்கள், டிசம்பர் 16-ஆம் தேதி முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரை ஒரு மாதம் கால அவகாசத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியல்

இறுதிப் பட்டியல்: இந்த விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்த பிறகு, பிப்ரவரி 14-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த ஒரு மாத காலத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுமா என்பது குறித்து விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!