இன்றே கடைசி!! தமிழக காவல்துறையில் 750 பணியிடங்கள்!!
தமிழ்நாடு காவல்துறையில் 750 காவல் துணை ஆய்வாளர் பதவி காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த எஸ்ஐ காலி பணியிடங்கள்: 750
தாலுகா எஸ்ஐ - 366
SI of Police (AR) - 145
SI of Police (TSP) - 110
Station Officer - 129.
இதில் 191 பணியிடங்கள் பெண்களுக்கானது. மொத்தம் உள்ள 750 இடங்களில் 123 இடங்கள் காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
கல்வி தகுதி: பட்டப்படிப்பில் தேர்ச்சி.
வயதுவரம்பு: 1.7.2023 அன்று 20 - 30 வயதிற்குள் இ இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை உண்டு. பிசி, எம்பிசி பிரிவினர் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம். விதவைகள் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம். கோட்டாவில் 47 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். முன்னாள் ராணுவத்தினர் 47 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதித்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
tnusrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. காவல்துறையில் பணிபுரிபவர்கள் ரூ.1000 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.6.2023 இன்றே கடைசி
ஆகஸ்ட் மாதம் எழுத்து தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் (40%) பெற்றிருக்க வேண்டும்.
ஓபன் கோட்டா மற்றும் காவல் துறைசார்ந்த இரு பிரிவுகளின் கீழும் விண்ணப்பித்தவர்கள் தமிழ் மொழித் தகுதித் தேர்வை ஒருமுறை எழுத வேண்டும். முதன்மை எழுத்துத் தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் திறந்தநிலைத் தேர்வர்களுக்கு 25 மற்றும் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையம், தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!