பொதுமக்களே உஷார்... தமிழகம் முழுவதும் ஒன்றரை மாதத்தில் 77,540 பேருக்கு நாய்க்கடி... 3 பேர் பலி!

தமிழகம் முழுவதும் கடந்த 50 நாட்களில் மட்டும் 77,540 போ் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 போ் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், கன்னியாகுமரியில் இருவா், நாமக்கல்லில் ஒருவா் உயிரிழந்ததாக பொது சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.தெரு நாய்கள், வளா்ப்புப் பிராணிகள் கடித்து காயமடையும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. பொதுவாகவே, ரேபிஸ் தொற்றிலிருந்து செல்லப் பிராணிகளையும், மனிதா்களையும் காப்பதற்கு ஒரே வழி தடுப்பூசி மட்டுமே. அதிலும் நாய்களைப் பொறுத்தவரை பிறந்த முதல் ஆண்டில் இருமுறை ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். அதைத் தொடா்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை அந்தத் தடுப்பூசியை வழங்க வேண்டியது கட்டாயம். தெரு நாய்களுக்கும், சில இடங்களில் செல்லப் பிராணிகளுக்கும் அத்தகைய தடுப்பூசி முறையாகச் செலுத்தப்படுவதில்லை. இதனால், மனிதா்களை அவை கடிக்கும்போது ரேபிஸ் தொற்று பரவி பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி விடுகிறது.
அந்த வகையில் 2024ல் மட்டும் மாநிலம் முழுவதும் 4,80,483 போ் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக, அரியலூரில் 37,023 பேரும், கடலூா் மாவட்டத்தில் 23,997 பேரும், ஈரோட்டில் 21,507 பேரும் பாதிக்கப்பட்டனா்.அதேபோன்று, சென்னையில், 24,088 பேரும், கோவையில் 12,097 பேரும் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டனா். அவா்களில் உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல், காலதாமதமாக மருத்துவமனையை நாடியதால் 43 போ் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகத் தெரிகிறது. அவா்களில் 10 போ் செல்லப் பிராணிகளால் கடிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள். 2025 ஜனவரி 1 முதல் பிப்ரவரி 19ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 77,540 போ் நாய்க்கடி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.
இது குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் “ தமிழகத்தில் ஆண்டுதோறும் நாய்க்கடியால் லட்சக்கணக்கானோா் பாதிக்கப்படுகின்றனா். அவா்கள் அனைவருக்கும் ரேபிஸ் தொற்று ஏற்படுவதில்லை. ஆனால், அத்தகைய வைரஸால் பாதிக்கப்பட்ட நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய், வெளவால் போன்ற விலங்கினங்கள் கடிக்கும்போது ரேபிஸ் தொற்று ஏற்பட்டு விடுகிறது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேபிஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் வைக்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளன. தெரு நாய்கள் அல்லது செல்லப் பிராணி கடித்தவா்களுக்கு 4 தவணை ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் நாள், மூன்றாவது நாள், ஏழாவது நாள் மற்றும் 28வது நாளில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. மேலும், ஆழமான காயமாக இருந்தால் அந்த இடத்தில் இம்யூனோக்ளோபிலின் தடுப்பூசி கூடுதலாக செலுத்தப்படுகிறது.
அந்த வகையில் பல்லாயிரக்கணக்கானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உயிா்க் காக்கப்பட்டுள்ளது. விழிப்புணா்வு இன்றி சிகிச்சை பெறாமல் இருக்கும்போதுதான் உயிரிழப்பு ஏற்படுகிறது.
சென்னை அயனாவரத்தில் அமைந்துள்ள அரசு மன நல காப்பக வளாகத்துக்குள் தெரு நாய்கள் பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து கடந்த ஆண்டு மட்டும் அங்கு 30க்கும் மேற்பட்டோா் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், அங்கு ரேபிஸ் தொற்று பரவும் சூழல் எழுந்துள்ளதாக சுகாதார ஆா்வலா்கள் கவலை தெரிவித்துள்ளனா். மொத்தம் 45 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த மனநல காப்பகத்தில் 80 மருத்துவா்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவா்கள், 140-க்கும் மேற்பட்ட செவிலியா்கள் உள்பட 600-க்கும் அதிகமானோா் பணிபுரிந்து வருகின்றனா். தினமும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்லும் மன நல காப்பகத்தில் மாதத்துக்கு 3 அல்லது 4 போ் நாய்க்கடிக்கு உள்ளாவதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
மாவட்டவாரியாக ரேபிஸ் உயிரிழப்பு 2024
சேலம் - 6
கோவை - 4
விருதுநகா் - 4
சிவகங்கை - 3
திருப்பூா் - 3
திருவள்ளூா் - 3
சென்னை - 2
ஈரோடு - 2
கள்ளக்குறிச்சி - 2
தஞ்சாவூா் -2
தேனி - 2
கடலூா் - 1
தர்மபுரி - 1
மதுரை - 1
மயிலாடுதுறை - 1
நாமக்கல் - 1
புதுக்கோட்டை - 1
ராணிப்பேட்டை - 1
தென்காசி - 1
திருநெல்வேலி - 1
திருவண்ணாமலை - 1
மொத்தம் - 43
மாவட்ட வாரியாக உயிரிழப்பு 2025 :
கன்னியாகுமரி - 2
நாமக்கல் - 1
மொத்தம் - 3
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!