தூத்துக்குடியில் 8.4 கிலோ கஞ்சா பறிமுதல்... 3 பேர் கைது!

 
3 பேர்

 


தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த  3 பேரை போலீசார் கைது செய்தனர். 8 கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்  ஜான் உத்தரவின்படி  நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன்  தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு)  யேசுராஜசேகரன், சார்பு ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் நேற்று ஜூன் 18ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கஞ்சா கடத்தல்

அப்போது அம்பேத்கர் நகர் சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் தூத்துக்குடி நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் முருகன் (எ) டியோ முருகன் (27), ரஹ்மத்துல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் மகன் கோவிந்தராஜா (எ) கோபி (23) மற்றும் பூபாண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் சடைமாரியப்பன் (23) என்பதும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

கஞ்சா

உடனடியாக போலீசார் மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த மொத்தம் 8 கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது