ஸ்கூல் கட் அடிச்சுட்டு 8ம் க்ளாஸ் பொண்ணு செஞ்ச வேலை! நெகிழ்ச்சியில் தந்தை!

 
சாத்விகா சிந்து

திருச்சி, பொன்மலை கேந்திர வித்யாலயா பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார் மாணவி சாத்விகா. படிப்பிலும் சுட்டியான சாத்விகா, மாநில அளவிலான பேட்மிட்டன் வீராங்கனையும் கூட. சாத்விகாவின் ரோல் மாடல் பிரபல பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து.

இந்நிலையில், திருச்சியில் உள்ள கேர் கல்லூரிக்கு பேட்மிட்டன் வீராங்கணை பி.வி. சிந்து வருவதாக கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து திருச்சி நகர் முழுவதும் விளம்பரங்கள் வந்து கொண்டேயிருந்தன. இதைப் பார்த்த மாணவி சாத்விகாவுக்கு பி.வி. சிந்துவை நேரில் சந்தித்தித்தே தீர் வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

பொதுவாக சனிக்கிழமை விடுமுறை தினத்தில் பி.வி.சிந்து வரும் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த சனிக்கிழமை சாத்விகாவுக்கு பள்ளி வேலை நாளாக அமைந்ததில் வருத்தம் ஏற்பட்டது. எங்கே பி.வி.சிந்துவை நேரில் சந்திக்க முடியாமல் போய் விடுமோ என்கிற கவலையில், தனக்கு இந்த சனிக்கிழமை விடுமுறை என்றும், சிந்துவைப் பார்க்க அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் தந்தையிடம் கூறி விட்டார். அதே போன்று, தன்னை அழைத்து செல்ல வரும் வேன் டிரைவரிடமும், சனிக்கிழமை தான் ஊருக்குச் செல்வதால், பள்ளிக்கு வரவில்லை. அதனால் வீட்டிற்கு அழைத்து செல்ல வர வேண்டாம் என்றும் கூறி விட்டார்.

பி.வி.சிந்து

மகளின் ஆசையை நிறைவேற்ற தந்தையும், அதிகாலையில் எழுந்து, கேர் கல்லூரிக்குச் சென்று, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அனுமதி வாங்கி, மகள்  சாத்விகா, பி.வி.சிந்துவை நேரில் சந்திக்க அனுமதி வாங்கினார். 

சிந்துவும், சாத்விகாவுக்கு வாழ்த்துக்கள் கூறி, விளையாட்டோடு சேர்த்து நன்றாக படிக்கவும் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.  சாத்விகாவுடன் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். மகிழ்ச்சியில் தந்தையும், மகளும் வீடு திரும்புகையில் தான் திடீர் ட்விஸ்ட். 

பி.வி.சிந்து

கேந்திர வித்யாலயா பள்ளியின் வேன், இருவரையும் கடந்து சென்றது. அது வழக்கமாக சாத்விகாவை அழைத்து செல்லும் பள்ளி வேன். இன்று விடுமுறை என்றாயே என தந்தை  மகளைப் பார்த்து முறைக்க, உண்மையை கூறியிருக்கிறார் சாத்விகா.  பள்ளி வேன் டிரைவரிடத்திலும் பொய் கூறியதை தந்தையிடம் சொல்லி, மன்னிப்பு கேட்டார். 

பார்க், சினிமான்னு ஊர் சுத்தாம உனது ரோல் மாடலைப் பார்க்க தானே விடுமுறை எடுத்துள்ளாய்.. இனி உன் பக்கம் நியாயம் இருப்பதாக நினைத்தால் உண்மையைப் பேசு’ என தந்தையும் மகளுக்கு அட்வைஸ் செய்துள்ளார். சாத்விகாவின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web