சென்னையில் 8ம் வகுப்பு மாணவி தற்கொலை!

 
சர்மி

சென்னை, மதுரவாயல் பகுதியில், 8ம் வகுப்பு படித்து வந்த மாணவி, தாய் தன்னை அடிப்பார்களோ என்று பயந்து, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல், சீமாத்தம்மன் நகரில் வசித்து வருபவர் முருகன் (37).  இவரது மனைவி புனிதா (32). முருகன் கூலி வேலைச் செய்து வருகிறார். இவரது மனைவி புனிதா (32) அதே பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வருகிறார். இவர்களுக்கு சர்மி (12) என்ற மகளும், கமலேஷ் (6) என்ற மகனும் உள்ளனர்.

suicide

அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சர்மி 8ம் வகுப்பும், சர்மியின் தம்பி கமலேஷ் 2ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். இந்நிலையில், பள்ளியில் தேர்வு எழுதி விட்டு வீட்டுக்கு வந்த சர்மி, தனது தந்தைக்கு போன் செய்து, ‘தம்பி சரியாக படிக்கவில்லை. அவனை நான் அடித்து விட்டேன்’ என்று கூறியுள்ளார். பின்னர், வேலை முடிந்து  அன்றைய தினம் மாலையில் முருகன் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் மகள் சர்மி புடவையால் தூக்குப்போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சர்மியை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சர்மி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார் மற்றும் விருகம்பாக்கம் மகளிர் போலீசார் சர்மியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Maduravoyal-PS

சர்மி தனது தம்பி சரியாக படிக்கவில்லை என்று அவனை அடித்ததால், தனது தாயார் வந்து தன்னை அடிப்பாரோ என்ற பயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். சர்மியின் மரணம் குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web