மே 8ம் தேதி ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!!

 
தேர்வு தாள்கள் திருத்தும் பணி

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மே 7ல் நடக்கும் நீட் தேர்வு காரணமாக மே 5ம் தேதிக்கு பதில் 8ம் தேதி  திங்கட்கிழமை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனத் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்றது.  12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தமிழகம்  மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8.76 லட்சம் பேர் எழுதினர்.  ஏப்ரல்  10ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி  ஏப்ரல் 21ம் தேதி நடைபெற்றது.

ரிசல்ட் முடிவுகள் தேர்வு தேர்தல்

இதையடுத்து, தற்போது  மதிப்பெண் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், +2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு, மே 7ம் தேதி நடைபெற உள்ளது.  நீட் தேர்வுக்கு ஒரு நாள் முன்பு, + 2 தேர்வு முடிவை வெளியிட்டால், பிளஸ் 2வில் தங்களின் எதிர்பார்ப்புக்கு குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள், நீட் தேர்வையும் சரியாக எழுத முடியாமல், மனதளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம்.

நீட் நுழைவுத்  தேர்வு

இதனால் +2 தேர்வு முடிவுகளை வெளியிடாமல் தள்ளிப்போடலாம். இதனால் மே5 ம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web