கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி... பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்!

ஆந்திர மாநிலம் சிம்மாசலத்தில் ஸ்ரீ வராஹ லட்சுமி நரசிம்ம கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் முதல் தரிசனத்திற்காக அதிகாலையில் பல பக்தர்கள் வந்திருந்தனர். அதிகாலை 2.30 மணியளவில் பலத்த மழை பெய்ததால் சுவர் இடிந்து விழுந்தது.
#WATCH | Andhra Pradesh | Visuals from the Sri Varahalakshmi Narasimha Swamy temple in Visakhapatnam, where seven people died after a 20-foot-long stretch collapsed during the Chandanotsavam festival pic.twitter.com/q7CWB4vfJr
— ANI (@ANI) April 30, 2025
இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ”ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் . காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!