சாப்பிட கூப்பிட்டும் வரல... அறையில் சடலமாக கிடந்த 9 வயது மகள்... கதறித் துடித்த தாய்!
மகாராஷ்டிர மாநிலத்தில் 9 வயது சிறுமி பிருந்தா இரவு உணவிற்கு வராததால் அவரது தாய் தேடிச் சென்றபோது, சிறுமி தனது அறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீண்ட நேரமாகியும் பிருந்தா சாப்பிட வராததால் சந்தேகமடைந்த தாய், அவளது அறைக்குச் சென்று பார்த்தபோது சிறுமி மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அலறியுள்ளார்.

உடனடியாகச் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். சிறுமியின் இந்த எதிர்பாராத மரணத்தால் நிலைகுலைந்து போன குடும்பத்தினர், மருத்துவமனையிலேயே கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்கச் செய்தது. விளையாட்டுப் பருவத்தில் இருந்த சிறுமி திடீரென உயிரிழந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சிறுமியின் மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், உடற்கூறாய்வு அறிக்கைக்குப் பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மர்மமான முறையில் நிகழ்ந்துள்ள இந்தச் சிறுமியின் மரணம் குறித்துப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
