நெபுலைசர் வைத்ததில் 4 வயது சிறுமி உயிரிழப்பு!! கதறி துடித்த பெற்றோர்!!
குழந்தைகளை வளர்ப்பது பெரிய சவால் தான். அதிலும் உடல் நிலை சரியில்லை எனில் திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கொப்பம்பட்டியை சேர்ந்தவர் குமார் லாரி டிரைவர். இவரது மகள் துர்கா ஸ்ரீ (4) இவர் ரிச்சட்டிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார் இந்நிலையில் நேற்று உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் சளி இருமல் அதிகமாக இருந்துள்ளது.
இதனால் இவரை கொப்பம்பட்டியில் உள்ள தனியார் மெடிக்கலுக்கு பெற்றோர்களால் அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி சளிக்காக ஆவி (நெபுலேசர்) பிடித்துள்ளார். மேலும் அங்கிருந்து மருந்து மாத்திரைகளையும் பெற்றோர்கள் வாங்கி சென்றுள்னர்.
இந்நிலையில் நள்ளிரவில் சிறுமிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வீட்டிலேயே இறந்து விட்டதாக தெரிகிறது இதுபற்றி தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளி மாணவியின் இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!