பிரபல இளம் நடிகை படப்பிடிப்பு தளத்தில் தற்கொலை!!

 
துனிஷா

மகாராஷ்டிராவில் பிரபல சீரியல் நடிகை துனிஷா ஷர்மா . இவருக்கு வயது 20.இவர் படப்பிடிப்பிற்கு சென்றிருந்தபோது அங்கு உள்ள மேக்கப் அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  தொலைக்காட்சி தொடர் ஒன்றின் படப்பிடிப்பு தளத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.  உடனே  மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக  மருத்துவர்கள் தெரிவித்தனர்.



துனிஷா அலி பாபா தஸ்கான் - இ- காபூல் என்ற தொலைக்காட்சி தொடரின் முன்னணி நடிகையாக இருந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். கடந்த சில நாட்களாகவே படப்பிடிப்பு தளத்தில் துனிஷா டென்ஷனாக இருந்து வந்தார். 5 நேரத்திற்கு முன்பு தான்  துனிஷா தனது மேக்கப்பை செட்டில் இருந்து செய்து கொள்ளும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

துனிஷா  பிரபல தொலைக்காட்சித் தொடர்களான 'சக்ரவர்தின் அசோக சாம்ராட்', 'பாரத் கா வீர் புத்ரா - மஹாராணா பிரதாப்' மற்றும் 'அலி பாபா தஸ்தான்-இ-காபூல்'  தொடர்களில்  இவரது கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்கொலை செய்து கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன், துனிஷா தனது புகைப்படத்தை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அத்துடன் "தங்கள் ஆர்வத்தால் உந்தப்படுபவர்களை தடுக்க முடியாது" எனவும் பதிவிட்டிருந்தார். அதே போல் 'ஃபிதூர்' மற்றும் 'பார் பார் தேக்கோ'  படங்களிலும் துனிஷா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!