போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்த மனைவியை அடித்தே கொன்ற கணவன்.. அம்பத்தூரில் பரபரப்பு!!

 
ரேவ

குடியை நிறுத்தும் படி தொடர்ந்து வலியுறுத்தி வந்த மனைவி, தன்னை போதை மறுவாழ்வு மையத்தில் வலுக்கட்டாயமாக சேர்த்ததால் ஆத்திரத்தில் மனைவியை கணவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூரை அடுத்த சூரப்பட்டு பகுதியில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளி வேலாயுதம் (55). இவரது மனைவி ரேவதி (48). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், குடிப்பழக்கத்துக்கு அடிமையான வேலாயுதம் வேலைக்கு செல்லாமல் தினந்தோறும் குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.

Murder

இதனால் அவரது மனைவி வேலாயுதத்தை அப்பகுதியில் உள்ள குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளார். அங்கு 6 மாத சிகிச்சைக்குப் பிறகு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலாயுதம் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி வந்தார். ஆனால் வீட்டிற்கு வந்த வேலாயுதம், மீண்டும் குடித்து விட்டு வந்து மனைவி ரேவதியுடன் தகராறு செய்து வந்தார். தன்னை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து பழிவாங்குவதாக கூறினார்.

இந்நிலையில் மீண்டும் இரவு குடி போதையில் வீட்டுக்கு வந்த வேலாயுதம், மனைவி ரேவதியுடன் தகராறு செய்தார். கணவன், மனைவிக்கு இடையே குடிப்பது பற்றிய வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த வேலாயுதம், ரேவதியை கைகளால் சரமாரியாக தாக்கி தள்ளிவிட்டார். இதில் சுவரில் மோதிய ரேவதி, தலையில் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Ambattur

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார், கொலையான ரேவதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து மனைவியை அடித்துக் கொன்றதாக வேலாயுதத்தை கைது செய்தனர். இந்த கொலைச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web