நடிகை கனகா வீட்டில் திடீர் தீ விபத்து! துணிமணிகள் எரிந்து நாசம்!

 
கனகா

பிரபல நடிகை கனகாவின் வீட்டில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள  கனகாவின் வீட்டில், விளக்கேற்றும் போது, தீப்பெறி பரவி இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

கனகா

நடிகை கனகா சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளதாக பல வருடங்களாக சர்ச்சைகள் கிளம்பி வருகின்ற நிலையில், கனகாவின் வீட்டிலிருந்து அதிகளவில் புகை கிளம்பி வருவதாக பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கும், தீயணைப்புத் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்த தகவல் அறிந்து  உடனடியாக மயிலாப்பூர் மற்றும் தேனாம்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் ராஜா அண்ணாமலைபுரம் முதல் தெருவில் உள்ள நடிகை கனகாவின் வீட்டிற்கு விரைந்து சென்றனர். கனகாவின் வீட்டைச் சுற்றிலும் புகை மண்டலமாக காட்சியளித்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது துணி மணிகள் எரிந்து நாசமாகிக் கொண்டிருந்தன.

பின்னர் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.  தீயை முழுவதும் பரவ விடாமல் அணைத்ததைத் தொடர்ந்து அபிராமபுரம் காவல் நிலைய போலீசார் நடத்தி விசாரணையில்,  பூஜை அறையில் விளக்கேற்றும் போது, தீப்பொறி பட்டு, வீட்டுக்குள் இருந்த துணிமணிகளில் எல்லாம் தீ பரவி எரிந்து சாம்பலானதாக தெரிய வந்துள்ளது. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web