பைக் ரேஸ்ல உயிரை விட்ட இளைஞன்! கதறி துடிக்கும் பெற்றோர்!

 
கவுரி

பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு அறிவுரை என்று சொல்ல ஆரம்பித்தாலே ஏதோ எதிரியைப் பார்ப்பதைப் போல பார்க்க துவங்கி விடுகிறார்கள். எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து பைக் ரேஸில் ஈடுபட்டு வந்த மகன், விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மரணமடைந்தது கண்டு பெற்றோர்கள் கதறியழுதது மருத்துவமனை வளாகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. ஆந்திரா மாநிலம்  கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள உய்யுர் பகுதியில் வசித்து வருபவர்  கவுரி சாய் கிருஷ்ணா. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் வசித்து வருபவர்  சாய் கிருஷ்ணா, 8ம் வகுப்புடன்  தன் பள்ளி படிப்பை நிறுத்திய நிலையில்,  மெக்கானிக் கடையில் பணியில் சேர்ந்தார்.

இவர் பைக் ஸ்டண்ட்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் சாய் கிருஷ்ணா. இவர்  உள்ளூர் பைக் ரேசர்களுடன் இணைந்து அபாயகரமான முறையில் பைக் ரேஸிங்கில் ஈடுபட்டு வந்தார் .

பைக் ரேஸ்

போக்குவரத்து  போலீசார் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் சாய் கிருஷ்ணாவுக்கு பைக் ரேஸ் மீதான ஆர்வம் குறையவில்லை. அவருடைய பெற்றோரும்  பைக் ஸ்டண்ட்களில் ஈடுபடுக் கூடாது என சாய் கிருஷ்ணாவை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். எதையும் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் கடந்த சில நாட்களுக்கு முன் விஜயவாடா நெடுஞ்சாலையில் நண்பர்களுடன் சேர்ந்து சாய் கிருஷ்ணா பைக் ஸ்டண்ட்டில் ஈடுபட்டுள்ளான்.

அழுகிய நிலையில் 15 வயது சிறுமியின் சடலம்- கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

இதில் பைக்கில் இருந்து தவறி விழுந்து தலை மற்றும் உடல் முழுவதும் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி  கிருஷ்ணா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் தொடர்ந்து 15 நாட்களாக உயிருக்கு போராடி வந்த சாய் கிருஷ்ணா, இறுதியில் சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக உயிரிழந்தான்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web