காரில் இழுத்துச் செல்லப்பட்ட இளம்பெண்! மேலும் ஒருவர் கைது!

 
அஞ்சலி

தலைநகர் டெல்லியை உலுக்கிய அஞ்சலி வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைநகர் டெல்லி கஞ்சவாலா நகரில் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்து விட்டு தனது தோழியுடன் ஸ்கூட்டியில் பயணித்த அஞ்சலி சிங்(20) என்ற இளம்பெண் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

delhi

செல்லும் வழியில், அவர் மீது அதிகாலை 3 மணியளவில் வேகமாக வந்த கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. அஞ்சலியின் கால், காரின் டயரில் சிக்கிய நிலையில், சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு அஞ்சலியை இழுத்தப்படியே கார் சென்றுள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. 

நிர்வாண கோலத்தில் 12 கி.மீட்டர் தொலைவில் அஞ்சலியின் உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். டெல்லி மட்டுமின்றி நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் மேலும் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

அஞ்சலி

குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 பேரையும் காப்பாற்ற முயன்ற வழக்கில் அஷுடோஷ் என்பவர் தான் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதேபோல், இந்த வழக்கில் தொடர்புடைய அன்கூஷ் கன்னா என்ற மற்றொருவரையும் டெல்லி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web