நடிகர் வடிவேலு தாயார் காலமானார்!! கதறித் துடித்த வைகைப்புயல்!!
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி. இவருக்கு வயது 87. இவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார்.தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்து வரும் நடிகர் வடிவேலு மதுரையில் பிறந்ததால், இவருக்கு வைகைப்புயல் என ரசிகர்கள் பட்டம் கொடுத்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் 1988 ல் வெளியான ”என் தங்கை கல்யாணி ” யில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் தான் முதலில் அறிமுகமானார். தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், அரண்மனை கிளி படங்களில் இவரது தனிப்பாணி நகைச்சுவை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.தமிழ் சினிமாவில் இவரது நகைச்சுவை திறமைக்கு தீனி போடும் வகையில் அடுத்தடுத்து படவாய்ப்புக்கள் அமைந்தன. அதன் பிறகு ஒரு கட்டத்தில் கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராகி விட்டார். அதே போல் சில சர்ச்சைகளால் சினிமா பக்கம் மீண்டும் தலைகாட்டாமல் இருந்து வந்தார். தற்போது மீண்டும் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” மூலம் ரீஎண்டரி கொடுத்துள்ளார்.
அவர் தமிழ் சினிமாவில் எத்தனை உயரங்களுக்கு சென்றாலும் அவரது குடும்பம் மதுரையிலேயே வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் வடிவேலுவின் தாயார் வயது மூப்பு காரணமாக உடல்நலம் குன்றியிருந்த அவர் திடீரென நேற்று இரவு காலமானார்.வடிவேலு வீட்டில் மூத்தவரின் உயிரிழப்பு குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!