கண்ணீருடன் விடைபெறுகிறார் நடிகை சமந்தா?! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

 
சமந்தா

தமிழ் மற்றும்  தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக  இருந்து வருபவர்  நடிகை சமந்தா. இவருடைய படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியான ‘யசோதா’ திரைப்படமும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.  கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை  சமந்தா அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

சமந்தா

கண்ணீருடன்  சிகிச்சையின் வீரியங்களை பகிர்ந்து கொண்டார். இதனையடுத்து அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். அத்துடன் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். நோய் பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வருவேன் என நடிகை சமந்தாவும் கூறியிருந்தார். இந்நிலையில் சமந்தாவுக்கு உயர் சிகிச்சை தேவைப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தன்பேரில், அவர் தென்கொரியா செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் இந்த நோயிலிருந்து முழுமையாக குணமடையும் வரை நடிப்பிலிருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்க நடிகை சமந்தா திட்டமிட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமந்தா

பாலிவுட் திரையுலகில் நடிகை சமந்தாவின் நடிப்பில் வெளியான பேமலி மேன் 2 ஹிட்டுக்குப் பிறகு  நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் உடல்நிலையில் அக்கறை செலுத்த வேண்டியிருப்பதால் நடிகை சமந்தா அவற்றை எல்லாம் தவிர்த்து வருகிறார். மேலும்நடிகை சமந்தா சினிமாவில் இருந்து ஓய்வு எடுப்பதாக இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவுப்பு எதுவும் வெளியிடவில்லை. இருப்பினும் சமந்தாவின் உடல்நிலை மற்றும்  திரைத்துறை ஓய்வு குறித்த வதந்திகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web