தலைக்கேறிய போதை! தாத்தாவை உயிரோடு கொளுத்திய பேரன்!

 
முகிலன்

மது போதை தலைக்கேறியதில், வாய் தகராறு முற்றி தாத்தா மீது மண்ணெண்ணெய் ஊற்றி பேரன் உயிரோடு கொளுத்திய சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர், குடவாசல் எரவாஞ்சேரி அருகே உள்ளது வடுககுடி. இந்த பகுதியில் வசித்து வருபவர் லட்சுமணன். மன்னார்குடி வனத்துறையில் பாதுகாவலராக பணியாற்றி வரும் லட்சுமணனின் மகன் முகிலன்(20) வடுககுடியிலேயே கூலி வேலை செய்து வரும் முகிலன் மது போதைக்கு அடிமையாகி, கிடைக்கிற பணத்தை வீட்டுக்குத் தராமல் தினந்தோறும் குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டு வருபவர் என்று கூறப்படுகிறது.  மகனின் போதைப் பழக்கத்தினால் அடிக்கடி தந்தை லட்சுமணனுக்கும் முகிலனுக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு வழக்கம் போல் முகிலன் குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால், லட்சுமணனுக்கும் முகிலனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த முகிலன் தனது தந்தை லட்சுமணனுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டுள்ளார். 

Fire

இருவருக்குமிடையே சண்டை நடந்த போது, முகிலனின் தாத்தா ரேனையன் (75) வீட்டின் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். மகன் லட்சுமணனுக்கும் பேரன் முகிலனுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவதால் ரேனையன் எப்போதும் அருகில் உள்ள கோவிலில் படுத்து உறங்குவதாக கூறப்படுகிறது.

அதிக சப்தத்துடன் இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்ததால், மகனுக்கும் பேரனுக்கும் நடந்த சண்டையினை சமாதானம் செய்வதற்காக ரேனையன் வந்ததுடன், முகிலனிடம், அவர் உன் அப்பா? ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறாய் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முகிலன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து வந்து தாத்தா மேல் ஊற்றி கொளுத்தியுள்ளார்.

Peralam

ரேனையனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரை அனுப்பி வைத்தனர். அங்கு 40 சதவீதம் தீக்காயத்துடன்  ரேணையன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்து பேரளம் போலீசார் வழக்கு பதிவு செய்து முகிலனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web