ஐஸ்வர்யம் அருளும் சூரிய வழிபாடு! சிறப்புக்கள், பலன்கள்!

 
சூரிய நமஸ்காரம்

பொங்கல் பண்டிகை என்றால் விவசாயம், கரும்பு என நினைவில் கொள்கிற நாம் சூரியனை மறந்து விடுகிறோம். வருடத்திற்கொரு முறை மட்டும் என்றில்லாமல் குறைந்த பட்சமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமாவது சூரிய வழிபாடு மேற்கொள்ளுங்கள். தினம் தினம் சூரியனை வழிபட்டால் இன்னும் சிறப்பு. அனைத்து கிரகங்களையும் தன்னை நோக்கி ஈர்த்து வைத்திருப்பது சூரியன் தானே? திங்கட்கிழமை சிவபெருமான் வழிபாடு, செவ்வாய்க்கிழமை சொந்த வீடு வாங்க முருகன் வழிபாடு, புதன்கிழமை விஷ்ணு, வியாழக்கிழமை சாய்பாபா சரணம், தட்சிணாமூர்த்தி, வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு ஐஸ்வர்யம் பெருகும், சனிக்கிழமை பெருமாள், நவக்கிரக வழிபாடு என தேடி தேடி வழிபாடு செய்பவர்கள் கூட ஞாயிற்றுக்கிழமை என்ன செய்வது? ஒரு நாள் ரெஸ்ட். மறுபடியும் நாளையிலிருந்து அடுத்த டர்ன் எனக் கூறுவதை காண முடிகிறது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை தான் தினம் நம்மை துயிலெழச் செய்யும் சூரிய பகவானுக்கு உகந்த தினம்.

சூரிய நமஸ்காரம்

நாம் தினந்தோறும் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். அது நம் மன நிம்மதிக்கு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் மிக அவசியம். அப்படி தினமும் செய்ய  முடியாவிட்டாலும், வாரத்தில் ஒரு நாள், தவறாமல், மறந்து விடாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமாவது அதிகாலை எழுந்து, சூரியோதயத்தைப் பாருங்கள். சூரியனை நமஸ்கரியுங்கள். தம் ஒளியால் உலகினை எழச்செய்யும் சூரியனால் தான் எல்லா உயிரினங்களும் இயங்குகின்றன. அதன் மூலம் சக்தியை பெற்றே தாவரங்களும் வளர்கின்றன. நம் கண்ணுக்கு தெரியும் தெய்வமாக இருப்பது சூரிய பகவான்.

இவரை தொடர்ந்து வழிபாடு செய்திட வாழ்வில் ஏற்றம் காணலாம் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு. தினமும் சூரிய ஒளிபடும் இடத்தில் சூரிய ரதம் வரைந்து, சூரிய பகவானை வேண்டிக்கொள்ள வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறலாம். 

இன்று சகல செல்வங்களையும் பெற சூரிய வழிபாடு !

சூரியன் நவக்கிரகங்களில் நடுநாயகமாக அமைந்துள்ளார். இவரை சிவனோடு இணைத்து சிவ சூரியன் எனவும், விஷ்ணுவோடு இணைத்து சூரிய நாராயணர் எனவும் அழைக்கின்றன புராணங்கள். சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்கிறார். சூரியன் ஒருராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் பொழுதுதான் மாதப்பிறப்பு நிகழ்கிறது.

சூரியன் பச்சை நிறமுடைய ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருகிறார். சூரியனின் ரதம் பொன் மயமானது என வர்ணிக்கிறது சூர்ய புராணம்.சூரிய பகவான், தன்னுடைய தேரில் நான்கு பட்டணங்களைச் சுற்றி வந்து, காலை, மதியம், மாலை, அர்த்தராத்திரி என்ற காலங்களை உண்டாக்குவதாக ஐதிகம்.தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால், சூரிய பகவானின் அருளைப் பெறலாம். சூரிய பகவானை வணங்குவோம். வாழ்வில் சுபிட்சமும் மன நிம்மதியும் பெற்று வளமோடு வாழ்வோம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web