சோகத்தில் முடிந்த சாகசம்!! பாராகிளைடிங் விபத்தில் விமானி பலி!!

 
சூரஜ்ஷா

மகாராஷ்டிரா மாநிலத்தில்  சதாரா மாவட்டத்தில் வசித்து வருபவர் 30 வயது  சூரஜ் ஷா. இவர் இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் குலு மாவட்டத்தில் உள்ள தோபி பகுதியில் பாராகிளைடிங் சாகசத்தில் கலந்து கொண்டார்.  பாராகிளைடர்  காற்றில் இருந்தபோது, அவரது பாதுகாப்பு பெல்ட் கழன்றதில் சூரஜ் தரையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

பாராகிளைடிங்

சூரஜ் உட்பட இருவரை அங்கிருந்தவர்கள் மீட்டு குலு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். ஆனால் சூரஜ் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. பாராகிளைடிங் விமானிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல் அதிகாரி குருதேவ் விடுத்த செய்திக்குறிப்பில் , விபத்தில் ஒரு சுற்றுலா பயணி பலியானார். பலியானவரின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணத்தை போலீசார் விசாரித்து குற்றவாளி கண்டுபிடிக்கப்படுவார்கள். பாராகிளைடிங் விமானிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அழுகிய நிலையில் 15 வயது சிறுமியின் சடலம்- கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!
சூரஜ் சஞ்சய் ஷா உயிரிழந்த  இமாச்சல பிரதேசத்தில், டேன்டெம் பாராகிளைடிங்கின் போது பல உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.  இதன் காரணமாக மாநிலத்தில் அனைத்து சாகச விளையாட்டு நடவடிக்கைகளும் இந்த ஆண்டு ஜனவரியில் மாநில உயர்நீதிமன்றம் தடை செய்யப்பட்டன. பெங்களுருவில்  12 வயது சிறுவன் பிர் பில்லிங் பாராகிளைடிங் தளம் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக அடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web