அட்ராசிட்டி!! 108 தோப்புக்கரணம் !! விஜய் ரசிகர்கள் நூதன பிரார்த்தனை!!

 
வாரிசு விஜய் ரசிகர்கள்

இளையதளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனை காண இப்போதே ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கிடக்கின்றனர். அதே நேரத்தில் அஜீத்தின் துணிவு படமும் வெளியாக இருக்கிறது. 8 ஆண்டுகளுக்கு பிறகு தல, தளபதி படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பது இருதரப்பு ரசிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்புக்களை உருவாக்கியுள்ளது.

வாரிசு

இயக்குநர் வம்சியின் டைரக்‌ஷனில் விஜய் நடித்திருக்கும் வாரிசு படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று முதல் ஆளாக அறிவித்திருந்தனர். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி  வந்த வாரிசு படத்தைப் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.

தமன் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா, ஷண்முகம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

விஜய்

இதனால் படம் வெற்றி பெற வேண்டி பல்வேறு விதமான பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் ஆகியோரின் படங்கள் 8 ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக மோதுவதால் ரசிர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்துக் கிடக்கின்றனர்.  தமிழகத்தில் 2 பேருக்கும் சரிசமமாக திரையரங்குகள்  ஒதுக்கப்பட்டுள்ளன.

விஜய்யின் வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி விஜய் ரசிகர்கள் மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலின் விநாயகர் சன்னதியில் 108 தோப்புக்கரணம் போட்டு  வினோத பிரார்த்தனை செய்தனர். அத்துடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் செய்யப்பட்டன. இன்றைய தினம்  கோவில் வளாகத்தில் அன்னதானமும் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web