ரத்தம் சொட்ட சொட்ட பா.ஜ.க மாநில நிர்வாகி மீது நடுரோட்டில் தாக்குதல்! தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
பாஜக மாநில நிர்வாகி மீது நடுரோட்டில், ரத்தம் சொட்ட சொட்ட மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு திருக்கழுகுன்றம் பகுதியைச் சேர்ந்தவர் துரை தனசேகரன். தமிழக பாரதிய ஜனதா கட்சியில் முன்னாள் மாநில செயலாளராக பதவி வகித்து வந்த துரை தனசேகரன் அந்த பகுதியில் மக்களின் தேவையை பூர்த்தி செய்து, அவர்களின் பிரச்சனைகளையும் சரி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், திருக்கழுகுன்றம் பகுதியில் தற்போது கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாகவும், மாணவர்களும், இளைஞர்களும் அதிகளவில் இதனால் பாதிக்கப்படுவதாகவும் தனது முகநூல் பக்கத்தில் துரை தனசேகரன் வீடியோவாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில், திருக்கழுகுன்றம் காவல் நிலையத்தில் இருந்து போலீசார், துரை தனசேகரனையும், கஞ்சா வியாபாரம் செய்யும் நான்கு பேரையும் விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர்.
இரு தரப்பினரையும் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்து முடித்ததும், தனசேகரன் காவல் நிலையத்தில் இருந்து தனது வீடு திரும்பும் போது, நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் தனசேகரனை கொலைவெறியில் சரமாரியாக பட்டப்பகலில் தாக்கியுள்ளனர்.
செங்கல்பட்டுமாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் கஞ்சா புழக்கம் @annamalai_k @CMOTamilnadu @CTR_Nirmalkumar @blsanthosh @narendramodi @PMOIndia விசாரிந்த பாஜக நிர்வாகி துரைதனசேகர் ஜி அவர்களை மர்மநபர்கள் வெட்டியுள்ளனர்
— perumal anthony (@perumalanthony2) December 18, 2022
இப்போது செங்கல்பட்டு அரசுமருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் pic.twitter.com/EmqkBJ0f7t
முகநூலில், கஞ்சா விற்பனை தனது பகுதியில் அதிகளவில் இருப்பதாக தனசேகரன் வீடியோ பதிவு செய்து 17 மணி நேரத்தில் மர்ம நபர்கள் அவரது இனோவா காரையும், கண்ணாடியையும் அடித்து, உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். தனசேகரையும் சரமாரியாக பட்டப்பகலில் நடுரோட்டில் தாக்கியுள்ளனர்.
அதன் பின்னர், இரத்த வெள்ளத்தில் பலத்த காயங்களுடன் இருந்த தனசேகரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வருகிறார். துரை தனசேகரனைக் காண ஏராளமான பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடியுள்ளதால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே கஞ்சா வியாபாரிகளை கைது செய்யாமல், அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி, வெளியே அனுப்பிய காவலர்களைக் கண்டித்துபொதுமக்கள், அவர்களை உடனே கைது செய்யும்படி தர்ணா செய்து வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!