பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காய் வழங்க கோரி பிஜேபி ஆர்ப்பாட்டம்!!
பொங்கல் பரிசு தொகுப்பில் விலையில்லா தேங்காயை வழங்க கோரி பாரதிய ஜனதா கட்சியினர் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காயை சேர்க்கக் கோரியும், விலையில்லா தேங்காய் வழங்க கோரி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் திருச்சி மாநகர் புறநகர் விவசாயிகள் ஒன்று திரண்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் மாநில திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தமிழக ஆளும் திமுக அரசு பொங்கல் தொகுப்பில் வழங்காத தேங்காயை பொதுமக்களுக்கு பாரதிய ஜனதா கட்சியினர் வழங்கப் போவதாக அறிவித்திருந்தனர். இதனையொட்டி தேங்காயை வழங்க வந்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்ததாக கூறி பாரத ஜனதா கட்சியினர் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கலெக்டர் அலுவலகம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!