தடுப்பூசி போட்டதால் பச்சிளம் குழந்தை பலி!! கதறி துடிக்கும் பெற்றோர்!!

 
குழந்தை

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் விஜயகுமார். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு  52 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு 45 நாட்களில் போட வேண்டிய தடுப்பூசியை இதுவரை  போடவில்லை. 
இந்நிலையில்  குழந்தை பிறந்த 52வது நாளான நேற்று ஆலம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் பிள்ளையார்நத்தம் குழந்தைகள் மையத்தில் அந்த குழந்தைக்கு 3 தடுப்பூசி போட்டனர்.

மாணவிக்கு பிறந்த குழந்தை

குழந்தையின் இரண்டு தொடைகளில் 2 தடுப்பூசியும், கையில் ஒரு தடுப்பூசியும் போடப்பட்டது.  இன்று அதிகாலை குழந்தையின் வாயிலும், மூக்கிலும் ரத்தம் வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை உயிரிழந்து விட்டது. 

போலீஸ்
இதனை கேட்டு கதறி அழுது பெற்றோர் குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து  குழந்தையின் பெற்றோர் கூறுகையில், குழந்தைக்கு ஒரே நாளில் 3 தடுப்பூசி போட்டுள்ளனர்.  ஒரே நாளில் 3 ஊசி போட்டதால் தான் குழந்தை இறந்துவிட்டது. குழந்தை இறப்பில் மர்மம் இருக்கிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகே  குழந்தையின் உடலை பெற்றுக்கொள்வோம் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web