பிறந்து 14 நாட்களில் பெண் சிசு மர்ம மரணம்?! திடுக்கிடும் பிண்ணனி!!

 
குழந்தை

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு தேவராஜ் நகரில் வசித்துவருபவர் ராமச்சந்திரன் - ரம்யா தம்பதியினர். இவர்களுக்கு  3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்து வரும் நிலையில்  நவம்பர் 29ம் தேதி கடமலைக்குண்டு அரசு மருத்துவமனையில் ரம்யாவிற்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை கடந்த 4 நாட்களுக்கு முன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.. அங்கன்வாடி பணியாளர் அவர்களின் வீட்டில் குழந்தைக்கு தடுப்பூசி போட சென்ற போது இந்த விஷயம் தெரியவந்தது

தடுப்பூசி

.அப்போது வீட்டில் இருந்த உறவினர்கள் டிசம்பர் 12ம் தேதி குழந்தை மூச்சு திணறி உயிரிழந்து விட்டதாகவும், குழந்தையின் உடலை வீட்டின் அருகே புதைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.  குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சமூகநலத்துறை அலுவலர் புகார் அளித்தார். இவர் அளித்த புகாரின் அடிப்படையில் வருவாய் அதிகாரிகள் முன்னிலையில் பெண் சிசுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மீண்டும் புதைக்கப்பட்டது.

போலீஸ்

பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் குழந்தையின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அங்கன்வாடி பணியாளர் தெரிவிக்கையில் குழந்தை கடந்த முறை ஆரோக்கியமான உடல் வளர்ச்சியுடன் இருந்ததாக எந்த குறைபாடுகளும் இல்லாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web