பகீர்!! 2 வருடங்களாக 10 வயது சிறுமியைகு மிரட்டி பாலியல் பலாத்காரம்!! பெற்றோர்களே உஷார்!!

 
சிறுமி

நள்ளிரவு 12 மணிக்கு நகைகள் அணிந்த இளம்பெண் ஒருவர் எப்போது சுதந்திரமாக பாதுகாப்பாக வீட்டிற்கு செல்ல முடிகிறதோ அப்போது தான் உண்மையான சுதந்திரம் எனக் கூறினார். இதோ இன்று 74 வது குடியரசு தினம் . இன்னமும் இளம்பெண் கிடையாது, சின்னஞ்சிறு குழந்தை கூட தெருக்களில் விளையாட முடியாத அளவு மோசம் அடைந்துள்ளது என்பது தான் வருத்தமான விஷயம்.

முன்பெல்லாம் வேலைக்கு செல்லும் பெற்றோர் வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரங்களில் அக்கம் பக்கத்து வீடுகளில் குழந்தைகளை விட்டு செல்வது வழக்கமான ஒன்று தான். அதே போல் தெருக்களில் விளையாடுவதும் இயல்பான ஒன்று தான். காலம் வளர, வளர பிள்ளைகள் வெளியில் விளையாடுவதே இல்லை. சமூகமும் சீரழிந்து வருகிறது.  இன்றைய இளைய சமுதாயம் அதீத தொழில்நுட்ப வளர்ச்சி, சொகுசு வாழ்க்கை இலவசங்களால் வக்கிரம் அடைந்து  வருகிறது. பிறந்த குழந்தை தொடங்கி வயதான மூதாட்டி வரை ஒருவரையும் விட்டு வைப்பதில்லை. திருட்டு, கொலை, கொள்ளை தாண்டி பாலியல் பலாத்கார சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் பெற்றோர்கள் பயந்து பயந்து பெண்குழந்தைகளை வளர்க்க வேண்டி இருக்கிறது. 

கோவை மாவட்டம் கிழக்கு  பகுதியில் வசித்து வருபவர் 27 வயது ராஜ் என்ற அதிர்ஷ்டராஜ். அதிர்ஷ்டராஜ்க்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணமாக அவரது மனைவியை பிரிந்து விட்டார். இந்நிலையில் அதிர்ஷ்டராஜ் அந்த பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி அவரது வீட்டிற்கு யாரும் இல்லாத நேரத்தில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இது குறித்து வேறு யாரிடமும் கூற கூடாது என அந்த சிறுமிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். 

rape Abuse

இதனிடையே அதிர்ஷ்டராஜின் நண்பரான எட்டிமடையை சேர்ந்த வெள்ளைக்காரன் என்ற சுரேஷ்பாபுவிற்கும் இந்த விஷயம் தெரியவந்தது. இதையடுத்து நண்பர்கள் இருவரும் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யத் தொடங்கினர்.  ஒரு நாள் அந்த சிறுமி அதிர்ஷ்டராஜ் வீட்டில் இருந்து அழுதபடி வெளியே வந்துள்ளது. இதனைகண்ட அக்கம் பக்கத்தினர் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமி, அவர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து எடுத்து கூறியுள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அதிர்ஷ்டராஜ் மற்றும் சுரேஷ் பாபு ஆகிய 2 பேரையும் பிடித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த்னர்.

Bangladeshi-Teen-Arrested-While-Sneaking-Into-India

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அதிர்ஷ்டராஜூம், சுரேஷ்பாபும் சேர்ந்த கடந்த 2 ஆண்டுகளாக சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. பின்னர் அவர்கள் 2 பேரையும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கடந்த 2 வருடங்களாக மிரட்டி பாலியல் பலாத்காரம்  செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web