பகீர்! ஆசையாய் தந்தை கொடுத்த சாக்லேட் சாப்பிட்ட சிறுவன் பலி! கதறியழுத உறவினர்கள்!

 
சந்தீப்

ஆசையாசையாய் தந்தை வாங்கி வந்த ஃபாரின் சாக்லேட்டைச் சாப்பிட்ட சிறுவன், தொண்டையில் சாக்லேட் சிக்கி உயிரிழந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்கள் கதறியழுத படி, ஆற்றாமையில் தவித்தனர்.  ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கங்கன் சிங் என்பவர் தெலங்கானா மாநிலம் வாரங்கல் குடிபெயர்ந்து எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவியும், மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.  மூன்று குழந்தைகள் அப்பகுதியில் உள்ள சாரதா பப்ளிக் பள்ளியில் படித்து வருகின்றனர்.  

Choclate

இந்நிலையில் கங்கன் சிங் சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு வியாபார நிமித்தமாக சுற்றுலா  சென்று ஊர் திரும்பினார். சனிக்கிழமையன்று குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்லும் போது ஆஸ்திரேலியாவில் இருந்து வாங்கி வந்த சாக்லேட்களைச் சாப்பிடக்  கொடுத்துள்ளார். 

இவர்களில் 2ம் வகுப்பு படிக்கும் மகன் சந்தீப் (8) பள்ளிக்கு செல்லும் போது சாக்லேட்டை கொண்டு சென்றுள்ளார். பள்ளிக்குச் சென்ற சில மணி நேரம் கழித்து அந்த சாக்லேட்டை வாயில் போட்டு சாப்பிட்ட போது, அது தொண்டையில் சிக்கியது. இதனையடுத்து சந்தீப் வகுப்பில் அப்படியே கீழே சரிந்து விழுந்து  மூச்சுத் திணறினார். 

Telangana

இதைப் பார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சந்தீப்பைக் கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால், மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்த போது சந்தீப் மூச்சு திணறி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாக்லேட் சாப்பிட்டு 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web