பகீர்! 3 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை! மனைவி மீது சந்தேகத்தால் வெறிசெயல்!

 
முனிராஜா

மனைவியின் நடத்தை மீது எழுந்த சந்தேகத்தில், 3 மாத ஆண் குழந்தையின் காலை பிடித்து, கொடூரமாக பாறையில் அடித்தே கொன்ற தந்தையின் வெறிச்செயல் ஆந்திராவையே அலற செய்துள்ளது. கொடூரமாக கொலைச் செய்த முனிராஜாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி வாட்டர் ஹவுஸ் நகரில் வசித்து வருபவர் முனிராஜா (22). கூலி தொழில் செய்து வரும் இவருக்கு சுவாதி (19) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு நிகில் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த முனி ராஜா சுவாதியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். 

Andhra

இந்நிலையில் நிக்கிலுக்கு கடந்த 4 நாட்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்தது. குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என சுவாதி கணவரிடம் தெரிவித்தார். ஆனால் அவர் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல் காலம் கடத்தி வந்தார். கடந்த 26-ம் தேதி அதிகாலை சுவாதி தனது கணவரிடம் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாததால் உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறினார். 

அப்போது கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மகன் உயிருடன் இருந்தால் தானே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூறுவாய் என ஆத்திரமடைந்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் 2 கால்களையும் பிடித்து வெளியே தூக்கி வந்து அருகில் இருந்த பாறையில் ஓங்கி அடித்தார். இதில் குழந்தையின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனை கண்ட சுவாதி கதறி துடித்தார். முனிராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

Andhra

உடனடியாக சுவாதி குழந்தையை தூக்கிக் கொண்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு  குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனை கேட்ட சுவாதி அங்கேயே மயக்கம் அடைந்து விழுந்தார். இதையடுத்து மருத்துவர்கள் சுவாதிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து காளஹஸ்தி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த முனிராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web